யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவருக்கும், வேலணை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் தூதரகத்தில் நேற்று(28) இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் இந்திய இழுவைப்படகுகளால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,
நயினாதீவில் தற்சமயம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூரியகல மின் உற்பத்தி தொடர்பான விடையங்கள் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்திகள் மற்றும் வேலணை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் வேலணை பிரதேச சபையின் உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் புதிய சட்டமா அதிபராக டாட் பிளான்ச் நியமனம்!
மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!