நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.
தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் ஜீலை மாதம் 24ஆம் திகதி வரை இந்த தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!