இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள்
தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தனர்.
அதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(20) இடம்பெற்றது.
அதற்கமைய, பப்புவா நியூ கினியாவின் உயர்ஸ்தானிகராக வின்சென்ட் சுமாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
சோமாலிய கூட்டாட்சி குடியரசின் தூதுவராக அப்துல்லாஹி முகமது ஒடோவாவும்,
லக்சம்பர்க் குடியரசின் தூதுவராக கிறிஸ்டியன் பீவெர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வத்திக்கான் நகரின் தூதுவராக மொன்சிக்னோர் ஆண்டரேஜ் ஜோஸ்வோவிட்டும்,
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் நய்யர் நசீரும்,
குவைத் நாட்டின் தூதுவராக சாலேஹ் முபாரக் அல் -சார்வியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!