இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள்
தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தனர்.
அதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(20) இடம்பெற்றது.
அதற்கமைய, பப்புவா நியூ கினியாவின் உயர்ஸ்தானிகராக வின்சென்ட் சுமாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
சோமாலிய கூட்டாட்சி குடியரசின் தூதுவராக அப்துல்லாஹி முகமது ஒடோவாவும்,
லக்சம்பர்க் குடியரசின் தூதுவராக கிறிஸ்டியன் பீவெர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வத்திக்கான் நகரின் தூதுவராக மொன்சிக்னோர் ஆண்டரேஜ் ஜோஸ்வோவிட்டும்,
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் நய்யர் நசீரும்,
குவைத் நாட்டின் தூதுவராக சாலேஹ் முபாரக் அல் -சார்வியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!