இலங்கை போக்குவரத்து சபை எடுத்த இந்த முடிவு ஒரு நியமனம் அல்ல, இது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கை!
வீட்டுக்குள் அடக்கப்பட்ட கனவுகள் இன்று சாலைகளில் ஓடுகின்றன.
தன்னம்பிக்கையோடு மட்டுமல்லாது தைரியத்தோடும் பொறுப்போடும் ஓடுகின்றன.

பெண் உடலில் மட்டுமே மென்மையானவள், மனதால் வலிமையானவள்!
இந்த சாலைகளில் பெண்மை மட்டமல்ல,அவள் சந்ததியே பயணிக்கப் போகிறது.
ஒரு ஆண் வேலைக்கு சென்றால் ஒரு குடும்பம் வளர்கிறது.
ஒரு பெண் வேலைக்கு சென்றால் ஒரு சந்ததியே வளர்கிறது.
இந்த வரலாற்று மாற்றத்திற்கு துணை நின்ற இலங்கை போக்குவரத்து சபைக்கும்,தடைகளை தாண்டி வந்த பெண் நடத்துநர்களுக்கும் மங்கையர் அரங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!