இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினருக்கு முப்பது நாட்கள் சலுகை நுழைவு விசா வழங்கப்படவுள்ளது.
இலங்கையை அண்டிய கடற்பரப்பிலுருந்து ஈரானின் ‘ஐரிஸ் டினா’ மற்றும் ‘ஐரிஸ் புஷேர்’ கப்பல்களிலிருந்து 240 பேர் மீட்க்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்க்கப்பட்ட ஈரானிய கடற்படையினருக்கே இந்த முப்பது நாட்கள் சலுகை நுழைவு விசா வழங்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நடாளுமன்ற விவகாரகள் அமைச்சர் ஆனந்த விஜேபல தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில், மீட்க்கப்பட்டவர்கள் பாதுகாப்பு பெற்றவர்கள் என்றும், விசா வழங்கப்படுவது சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் கடல் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!