இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவற்படையின் பிரதானி பலி!

ஈரான் மீது இஸ்ரேல் இன்று(06) நடாத்திய தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைப் பிரதானி மஜித் கஹதெமி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“அமெரிக்க-சியோனிச எதிரி” நடத்திய “பயங்கரவாதத் தாக்குதலில்” தனது உளவுத்துறை பிரதானி கொல்லப்பட்டதாக ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான அமைதித் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version