ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாராகவுள்ளோம்: இஸ்ரேல் இராணுவ தளபதி தெரிவிப்பு!

உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், ஈரான் மீது மற்றொரு தாக்குதலை தொடுப்பதற்கு இஸ்ரேல் ராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் இராணுவ தலைமைத் தளபதி எயால் ஜமீர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பக்கட்டமே எனவும் ஜமீர் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தால் அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்கனவே பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவத் தளபதியின் இந்த அதிரடி அறிக்கை பிராந்தியத்தில் பெரும் போருக்கான சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version