உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு!

வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

இதற்கு பதிலடி வழங்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை இலக்குவைத்து உக்ரைன் சுமார் 800 ட்ரோன்களை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 791 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மொஸ்கோவை நோக்கி மட்டும் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் 180 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களிலும் பலர் காயமடைந்ததுடன், சில கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version