உதயகுமார் – குசுமாவதி இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை!

உதயகுமார் – குசுமாவதி இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளிகளாக காணப்பட்ட 8 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நீண்டகால விசாரணையின் பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் புத்திக ஸ்ரீ ராகலவால் இந்தத் தீர்ப்பு இன்று (08) வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் 7 பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததோடு, மேலும் ஒருவர் முன்னிலையாகாத நிலையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது.

1997 ஆம் ஆண்டு, கொழும்பு நீதிமன்ற எல்லைக்குட்பட்ட தாராவத்தை பகுதியில் ஹேவா படகொடகே குசுமாவதி மற்றும் வேலாயுதம் உதயகுமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலேயே சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version