எத்தியோப்பியாவிற்கு வேலை நிமித்தம் சென்று அங்கு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், கூட்டு விசேட நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட இலங்கையர்களை விடுவிப்பதற்காக 90 ஆயிரம் அமெரிக்க டொலர் பிணையாக கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடைய இரண்டு எத்தியோப்பியர்கள் மற்றும் நான்கு பாகிஸ்தானியர்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை எதியோப்பிய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
எத்தியோப்பியாவிலுள்ள இலங்கை தூதரகம், வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றோடு ஒருங்கிணைந்து,
எத்தியோப்பிய பாதுகாப்புப் படையினர் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!
புலம்பெயர முயன்ற 1300 ற்கும் அதிகமானோர் கடந்த ஐந்து மாதங்களில் கடலில் பலி!
பிரான்ஸுக்குள் நுழைய இஸ்ரேல் நிதியமைச்சருக்கு தடை!
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!