எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளையும் நாளை மறுதினமும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
அதன்படி ,ஒக்டேன் 95 ரக பெற்றோல் 7 ஆயிரம் மெற்றிக் தொன் மற்றும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 29 ஆயிரம் மெற்றிக் தொன் ஆகியவற்றை ஏற்றிய நாளை (10) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

அதேபோன்று நாளை மறுதினம் (11) 29 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
குறித்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இதற்கிடையே 32 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மற்றும் 7ஆயிரத்து 200 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் ஏற்றிவந்த கப்பலிலிருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் கொழும்புத் துறைமுகத்தில் தற்போது இடம்பெற்றுவருவதாக
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டார்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!