புத்தளம் வனாத்தவில்லு, மங்களபுர பகுதியில் அமைந்துள்ள ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மலர்களைப் பறிப்பதற்காகத் தெப்பத்தில் ஐந்து மாணவர்கள் நேற்று(30) நண்பகலில் சென்றுள்ளனர்.


இதன்போது தெப்பம் கவிழ்ந்ததில் மாணவர்கள் நீரில் மூழ்கினர்.
அவர்களில் ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய நான்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!