ஓமானில் கைது செய்யப்பட்ட ‘மிதிகம சூட்டி’ இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று(30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மிதிகம சூட்டிக்கு, சர்வதேச பொலிஸாரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து ஓமான் பொலிஸாரால் மிதிகம சூட்டி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மூவர் ஓமான் சென்றிருந்தனர்.

அதனையடுத்து மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று(30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version