கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப் பொருளோடு ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளோடு நபர் ஒருவர் நேற்று (02) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது
25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 25 கிலோ 500 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக
சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த நபர் இந்தப் போதைப்பொருளை கடத்திவந்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version