கவனயீனத்தால் ரயிலுடன் மோதுண்ட பெண்!

வவுனியா தாண்டிகுளம் ரயில் கடவையை கவனயீனமாக கடக்க முற்பட்ட பெண் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு படுகாயம் அடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(27) காலையில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த குறித்த பெண் ரயில் வேகமாக வருவதை பொருட்படுத்தாமல் கடவையைக் கடந்துள்ளார்.

இதன்போது ரயிலுடன் மோதுண்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version