வவுனியா தாண்டிகுளம் ரயில் கடவையை கவனயீனமாக கடக்க முற்பட்ட பெண் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு படுகாயம் அடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று(27) காலையில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த குறித்த பெண் ரயில் வேகமாக வருவதை பொருட்படுத்தாமல் கடவையைக் கடந்துள்ளார்.
இதன்போது ரயிலுடன் மோதுண்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!