கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியோக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதேவிளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விளக்கமறியலில் உள்ள சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், அவரை மேலும் ஜூலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து ஊதியம் பெற்ற குற்றச் சாட்டில்
குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கடந்த ஜூன் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version