ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கும், சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் “நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம்” காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமக்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர் சிறப்பு பொருளாதார வலயத்திற்காக வழங்கப்பட்டுள்ள ஒத்துழைப்பிற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version