சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும்,



அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ஞானப்பிரகாசம் கிஷோர், யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில்,
எதிர் மனுதாரர்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி வழக்கை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு யாழ்.மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த தவணையில், முறையீட்டு மனுவை ஆராய்ந்த யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன், இடைக்காலத் தடைக்கட்டளையை வழங்க மறுத்திருந்தார்.
இருந்தபோதிலும், எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர், தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்ப அனுமதியளித்திருந்தார்.
இந்த நிலையில் மனு மீதான இன்றைய விசாரணைகளின் பின்னர் எதிர் மனுதாரங்கள் ஆட்சேபங்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி வழக்கை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு நீதிபதி எஸ்.சதீஸ்தரன் ஒத்திவைத்துள்ளார்.
மனுதாரர் சார்பாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஆஜராகியிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!
அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!
செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!