பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் இயக்குநர் ஸ்ரீதேவி கண்ணதாசனின் மாணவியும், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் மாணவியுமான லக்ஸ்மிகா திஸாகரனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்றிரவு (07) இடம்பெற்றது.


வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் கா.சந்திரபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.


நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளர் திருமதி சாந்தினி சிவனேசன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!