பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 40 பேர் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து பெஷாவர் நோக்கிப் பயணித்த பேருந்து இன்று (03) விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு,பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 48 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர்.

சம்பத்தில் காயமடைந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் பிரேக் செயலிழந்ததே இந்த விபத்துக்கான ஆரம்பக்கட்ட காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version