பாகிஸ்தான் மகளிர் அணியுடனான T 20 தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!

பாகிஸ்தான் மகளிர் அணியுடனான T 20 தொடரை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை மகளிர் அணி 2:1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது இறுதியுமான இந்தப் போட்டி இன்று (04) தம்புள்ளையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில், துடுப்படுத்தாடிய இலங்கை மகளிர் அணி,
20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

T20 தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 17.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்டT20 தொடரை இலங்கை மகளிர் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version