கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் இன்று( 06) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கல்மடுநகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிறிகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே உயிரிந்துள்ளார்.
பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன்,
தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இருந்தபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!