பிரான்ஸில் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது: 400 பேர் கைது!

பிரான்ஸில் நடந்த கால்பந்து சம்பியன் லீக் வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி வென்றதைத் தொடர்ந்து,ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.

பிரான்ஸ் முழுவதும் ஆங்காங்கே கால்பந்து ரசிகர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன.

வன்முறையில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்காரமாக தலைநகர் பாரிஸில் பேருந்து, ரயில் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் முடங்கியுள்ளன.

நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க ஆயிரக்கணக்கான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version