மண் கடத்தலை காட்டிக்கொடுத்ததாக தெரிவித்து டிப்பர் வாகனத்தை மறித்து தாக்குதல்!

மாங்குளத்திற்கும், முறிகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தை இடைமறித்து மது போதையில் வந்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(10) இடம் பெற்றுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுவரும் இருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத மணல் அகழ்வில் தாங்கள் ஈடுபடும் தகவலை பொலிஸாருக்கு வழங்கினார் எனத் தெரிவித்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version