முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் மோட்டோரில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்குக் காரணம் எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் முதியோர் இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முன்னைபடுத்த பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version