முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி! மூவரைக் காணவில்லை!

இலங்கை, ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர்.

இந்த தீ விபத்து நேற்று (03) மாலை ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், 72 பேர் முதியோர் இல்லத்தில் இருந்துள்ளனர்.

அவர்களில் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும்,7 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் முதியோர் இல்லம் பெருமளவு சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version