திருகோணமலை மூதூரில் இராணுவ நடவடிக்கையின்போது படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களின் 20 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (04) இடம்பெற்றது.


மேற்படி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சுடர்கள் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!