யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு பெருந்தொகை தங்க கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதகல் கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தங்கக் கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகு கடலில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகள் மீட்டுள்ளன.
அதனை அடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ள கடற்படை, படகையும் கைப்பற்றியுள்ளது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!