இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசந்துறை மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு(18) இவர்களை கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் கடற்பரப்பில் வைத்து படகொன்றில் 5 மீனவர்களும், காங்கேசந்துறை கடற்பரப்பில் இரு படகுகளுடன் 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை மன்னார் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!