திருகோணமலை – ஈச்சிலம்பற்று – வாழைத்தோட்டம் கடற்கரையில், மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று(14) காலை கரையொதுங்கியுள்ளது.
இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தெப்பமானது பௌத்த மத அடையாளங்களை கொண்டுள்ளது.
இதனால் பௌத்த மத பூஜைகள் செய்யப்பட்டு கடலில் விடப்பட்ட இந்த தெப்பமானது கடலில் அடித்துச் செல்லப்பட்டு இங்கு வந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!