வெனிசுவேலாவில் நில நடுக்க இடிபாடுகளிலிருந்து 33 பேர் மீட்பு!

வெனிசுவேலாவில் நிலநடுக்கம் இடம்பெற்று 4 நாட்களைக் கடந்த நிலையிலும், இடிபாடுகளுக்குள் இருந்து மக்கள் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.

வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, வார இறுதி நாட்களில் மட்டும் இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் இரண்டு 11 வயது சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

கடந்த புதன்கிழமை 39 வினாடிகள் மட்டுமே இடம்பெற்ற 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களால் சுமார் 800-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

இதுவரை குறைந்தது 1,450 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version