களுத்துறை, அளுத்கம, -டிப்போ வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதுண்டதில் முச்சக்கரவண்டிச் சாரதி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த அலுவலக அதிவேக ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியுள்ளது.

ரயில் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!
கொழும்பு – காலிமுகத்திடல் நீராடிய மாணவர்களில் ஒருவர் பலி: இன்னொருவர் மாயம்!