யாழ்ப்பாணம் சரவணை பகுதியிலுள்ள ஆலயத்தின் விக்கிரகத்தை உடைத்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்திலுள்ள விக்கிரகமே நேற்று(09) சேதப்படுத்தப்பட்டது.
கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில்
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!