இந்திய அணியின் T20 அணித்தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்!

இந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், தொடருக்குப் பிறகு அவரது மோசமான செயற்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் அடுத்த நிரந்தர T20 அணித்தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த T20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி, ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தது.

அங்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இந்தியா விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version