இலங்கையில் அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு!

இலங்கை முழுவதும் தற்சமயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28ஆம் திகதியிடப்பட்டு இலக்கம் 2490/06 இன் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுப் பாதுகாப்பு, மக்களின் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதற்கும், ஒட்டுமொத்த மக்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கு அத்தியாவசியமாக விளங்கும் விநியோகங்கள் மற்றும் சேவைகளை எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி இந்த வர்த்தமானி மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version