யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில், பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் பலியாகி உள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று விட்டு தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர்.
விபத்தில்
ஏழாலை கிழக்கைச் சேர்ந்த பரமேஸ்வரன் 64 வயதுடைய தந்தையும்,23 வயதுடைய மகனுமே பலியாகியுள்ளனர்.
இருவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!