எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ‘இலங்கை பொற்றொலிய கூட்டுத்தாபனம்’ தனது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஒக்டேன் 92 பெற்றோல்,24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 317 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 பெற்றோல் 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக நிர்மணிக்கப்பட்டுள்ளது.
ஓட்டோ டீசல் 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 303 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன்புதிய விலை 353 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய்13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 195 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் எரிபொருட்களை விற்பனை செய்யும் Lanka IOC மற்றும் Sinopec Energy Lanka ஆகிய நிறுவனங்கள் இதுவரை தங்களது விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!