கடமைகளை பெறுப்பேற்ற யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தர்!

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசு வேல் நம்பி இன்று (25) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட ஆராதனைகளை தொடர்ந்து துணைவேந்தர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்தக் கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர்களான பேராசிரியர்
நா. சண்முகலிங்கம், பேராசிரியர் எஸ்.சிறிசற் குணராசா, பல்கலைக்கழக பதிவாளர் காண்டீபன், பல்கலைக்கழக சமூகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version