கொழும்பு, கஹதுடுவ – தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த வயல்வெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (26) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
கஹதுடுவ – தியகம வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பேருந்து, அதே வீதியில் எதிரே வந்த மற்றுமொரு வாகனத்துக்கு இடமளிக்க முயன்றுள்ளது.
இதன்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!
அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!
செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!