யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் குற்றத் தடுப்பு பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணை யாழ். குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று(19) இடம்பெற்றது.
சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடிக்கு பதிலாக கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளவே குறித்த மாணவர்கள் மூவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விசாரணையின் போது மாணவர்கள் சார்பாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் உடன் சென்றிருந்தார்.

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!