தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

நாடு முழுவதும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, நடாத்திய திடீர்ச் சோதனைகளில் மோட்டார்ச் சைக்கிலுக்கான தரமற்ற 431 தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், தரமற்ற முறையில் 3,500 தலைக்கவசங்களை தயாரித்த இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version