கோலாகலமாக இடம்பெற்ற வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் உணவுத் திருவிழா!

வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் உணவு திருவிழா, கோலாகலமாக இடம்பெற்றது.

யாழ் முற்றவெளி மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகிய உணவு திருவிழா,நேற்றிரவு வரை சிறப்பாக இடம்பெற்றது.

இதன்மூலம் வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய உணவுப் பண்டங்களை சுவைக்கும் சந்தர்ப்பத்தையும், கைவினைப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தையும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் அனைவருக்கும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இந்த உணவுத் திருவிழாவில் பல்லாயிரக் கணக்காண மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான பல்வேறு கலை நிகழ்வுகள் யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்றன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version