நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைதாள்கள் திருத்தும் பணிகள் நாளை (12) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.சுபாஷினி இந்திக்ககுமாரி லியனகே தெரிவித்தார்.
இந்தப் பரீட்சை விடை தாள்கள் திருத்தம் பணிகள் இரு கட்டங்களாக இடம் பெறவுள்ளன.
முதலாம் கட்டம் நாளை 12 ஆம் திகதி முதல் 23 வரை இடம்பெறவுள்ளது.
இரண்டாம் கட்டம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது.
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சை ஆணையாளர் ஏ.கே.சுபாஷினி இந்திக்ககுமாரி லியனகே குறிப்பிட்டார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!