“சிவபூமி சிறுவர் மன விருத்திப் பாடசாலை” யாழ்.சாவகச்சேரி வேலாயுதம் வீதியில் இன்று(28) திறந்து வைக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி நகரசபை தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஸ், வைத்திய கலாநிதி கமலா அருணாசலம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



தென்மராட்சி பிரதேசத்திலுள்ள பிறப்பிலே மன வளர்ச்சி குன்றிய மாணவர்களின் நன்மை கருதி இந்தப்பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, 2003 ஆம் ஆண்டு கோண்டாவிலும், 2016 ஆம் ஆண்டு கிளிநொச்சியிலும் இவ்வகைப் பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!