சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ஞானப்பிரகாசம் கிஷோரால், யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு, கட்டளைக்காக ஓகஸ்ட் மாதம் 19 திகதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது.


குறித்த மனு மீதான விவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம்(05) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று(05) வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது வடமாகாண யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன், கட்டளைக்காக வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!