சாவகச்சேரி பொலிஸ் நிலைய பரிசோதனை!

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நிகழ்வு நேற்று(17) இடம்பெற்றது.

பொலிஸ் நிலையங்களில் வருடந்தோறும் இந்த பரிசோதனை நிகழ்வு நடைபெற்றுவருகிறது.

இந்த நிகழ்வு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியச்சகர் ஜே.பி.எஸ். ஜெயமஹ தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரத்திற்குற்பட்ட வாகணங்கள், ஆவணங்கள், வழக்கு பதிவேடுகள் மற்றும் பொலிஸ் நிலைய வளாக அழகுபடுத்தல் பராமரிப்பு என்பன பார்வையிடப்பட்டன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version