செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி, அமைதிப் போராட்டம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி முன்றலில் இன்று(30) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மறைமாவட்டத்தின் நீதி, சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரியாலை புனித யூதாதேயு சொரூபம் முன்பாக ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஏ9 வீதியூடாக சிந்துபாத்தி மயான முன்றல் வரை போரணியாக சென்றனர்.

பின்னர் அங்கு மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version