இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 93,115 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
ஓகஸ்ட் மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 7,777 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிக டெங்கு நோயாளிகள் பதிவாகும் மாவட்டமாக கம்பஹா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அங்கு இதுவரை 19,825 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அதிகளவான நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!