சாவகச்சேரி நகராட்சி மன்றமும், யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்திய “தென்னிந்திய கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை” நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்றிரவு (27) சிறப்பாக இடம்பெற்றது.



இந்த நிகழ்வுக்கு யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் தென்னிந்திய கலைஞர்களின் மோகினியாட்டம் மற்றும் கதகளி ஆகிய ஆற்றுகைகள் இடம்பெற்றன.




கலைமாமணி ரஷ்மி மேனன் தலைமையில் மோகினி ஆட்டமும், கலாஸ்ரீ ஏவூர் ராஜேந்திரபிள்ளை தலைமையில் கதகளியும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து இந்திய கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!