தெற்காசிய எறிபந்து (Throwball) போட்டிக்கு இலங்கை தேசிய அணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் விளையாடுகின்றனர்.
இந்தியாவில் இன்று 16 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள தெற்காசிய எறிபந்துப்போட்டி,நாளை மறுதினம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, வவுனியா கனகராஜன்குளம் மகா வித்தியாலய மாணவரான நா.நாவேந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஏ.ஜெனிஸ்ரன் ஆகியோர் விளையாடுகின்றனர்.
எறிபந்து விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய அணியில் விளையாடும் இவ்விரு வீரர்களும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

வெற்றியுடன் கணக்கை தொடங்கிய அர்ஜென்டீனா: படைத்த சாதனை மெஸ்ஸி!
FIFA உலக கிண்ண இன்று இடம்பெற்ற போட்டிகள் மூன்றும் சமநிலையில் நிறைவு!
FIFA கால்பந்தாட்டப் போட்டியில்,ஜெர்மனி 7 கோல்கள் அடித்து வரலாற்று சாதனை!
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி அறிவிப்பு!